நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டிய தகவல்கள் !!

1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும்.

2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துக் சாப்பிட வேண்டும்.

3.ஆறு சுவைகளையும் முடிந்தவரை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்

4.உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்து உணவு நன்கு செரிமானமாகும்)

5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்.

6. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிட வேண்டும்.

7. உணவை கையால் எடுத்து சாப்பிட வேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.

8. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால்), தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்.

9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம்

 வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டு சாப்பிடக்கூடாது.

10. சம்மணமிட்டு சாப்பிட வேண்டும். இது உடலின் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கு செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.

11. தாய்மார் குழந்தைகளுடன் இருந்து சாப்பிடக்கூடாது.

12.உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

13. கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும்.

14.குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது.  சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது.

15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச்சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம். வுக்

16. தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல் அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.

17. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்திவிட வேண்டும்.

18.உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.

19. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.

20. டி,காபி போன்றவற்றை தவிர்த்து / குறைத்து அதற்கு பதில்

சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.

21. நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக் கொள்வது நல்லது.

22. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.

23. கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள், நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.

24. எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து விடாமல் ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல் சி ரித்த முகத்துடன் இருத்தல், நேர்மை மையான சிந்தனையை கொண்டிருத்தல், வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல் செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்.

25. ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மனதை மகிழ்ச்சிப்படுத்தும்.

1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும். 2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துக் சாப்பிட வேண்டும். 3.ஆறு சுவைகளையும் முடிந்தவரை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் 4.உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்து உணவு நன்கு செரிமானமாகும்) 5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும். 6. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிட வேண்டும். 7. உணவை கையால் எடுத்து சாப்பிட வேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது. 8. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால்), தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும். 9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டு சாப்பிடக்கூடாது. 10. சம்மணமிட்டு சாப்பிட வேண்டும். இது உடலின் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கு செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல. 11. தாய்மார் குழந்தைகளுடன் இருந்து சாப்பிடக்கூடாது. 12.உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 13. கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும். 14.குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது. சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது. 15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச்சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உ ண கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம். வுக் 16. தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல் அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும். 17. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்திவிட வேண்டும். 18.உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும். 19. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும். 20. டி,காபி போன்றவற்றை தவிர்த்து / குறைத்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம். 21. நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக் கொள்வது நல்லது. 22. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது. 23. கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள், நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம். 24. எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து விடாமல் ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல் சி ரித்த முகத்துடன் இருத்தல், நேர்மை மையான சிந்தனையை கொண்டிருத்தல், வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல் செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம். 25. ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மனதை மகிழ்ச்சிப்படுத்தும்.
Read More

உடலுக்கு புத்துணர்வையும் புதுப்பொலிவையும் தரும் வாழை இலை குளியல்

உலகில் உள்ள அனைத்து தாவரங்களும், மரங்களும் கரியமிலா வாயுவை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியே விடுகிறது. மனிதர்கள் ஆக்ஸிஜனை சுவாசித்து கரியமிலா வாயுவை வெளியே விடுகிறார்கள்.

 

அதாவது மனிதனின் வெளிமூச்சு தாவரங்களுக்கு உள்மூச்சு, தாவரங்களின் வெளிமூச்சு மனிதர்களுக்கு உள்மூச்சு, உயிரினங்களும் உலகில் ஆரோக்கியமாக வாழவே முடியாது. இதுவே இறைநிலையின் ஏற்பாடு.!

 

அதிலும் மற்ற தாவரங்கள் ஆக்ஸிஜனை மட்டுமே வெளிவிடுகிறது அதில் பிராணக்காற்றும் கலந்துள்ளது. ஆனால், வாழைமரம் மட்டுமே கரியமிலா வாயுவை உட்கொண்டு சுத்தமான மட்டுமே வெளிவிடுகிறது. மற்ற தாவரங்களிலிருந்து பெறப்படும்

பிராணவாயுவை ஆக்ஸிஜனில் இருப்பதை விட பலமடங்கு பிராணசக்தி வாழையிலையில் நிறைந்துள்ளது.

அதனால்தான் உடலில் பல்வேறு வழிகளில் தேங்கியுள்ள கரியமிலா வாய்வை வெளியேற்றி உடலில் உள்ள

கெட்ட காற்றையும் நீரையும் வெளியேற்ற வாழையிலை குளியல் ஒரு உபாயமாக இருக்கிறது.


வாழை இலை குளியலின் பயன்கள் :

 

1. உடல் எடையை குறைக்கும்.

 

2. உடல்வீக்கம், கை, கால்வீக்கத்தைப்போக்கும்.

 

3.சிறுநீரக செயலிழப்பை தடுக்கும்.

 

4.அலர்ஜி, மற்றும் தோல்வியாதிகள் குணமாகும்.

 

5. வியர்வை சுரபிகளில் ஏற்பட்டுள்ள தடையை போக்கும்.

 

6.உடலில் பல்வேறு உறுப்புகளில் தேங்கியுள்ள கெட்ட காற்றை வெளியேற்றும்.

 

7. உடலுக்கு புத்துணர்வையும், புதுப்பொலிவையும் தரும்.

 

8.நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்.

 

9. ஜாதகத்தில் சிலருக்கு ஏற்பட்டுள்ள மரணகண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.

 

10. அழகான தோற்றத்தை தரும்.

 

11. வர்மம். அக்குப்பஞ்சர் போன்ற மருத்துவ முறைகளை பின்பற்றுவோருக்கு பிரபஞ்ச ஆற்றலை பெறுவதற்கான இயக்கத்தை பள்ளிகளின் சீராக்கும்.

வாழை குளியல் எடுப்பவருக்கு ஆறுடம்ளர் தண்ணீர் கொடுத்து, தலையில் ஒரு டவ்வலை நனைத்து சுற்றி இலைகளில் படுக்க வைக்கவும்.

கால் பாதம் வரை உச்சந்தலை வரை உடலில் எந்த பாகமும் வெயியே தெரியாதபடி அவரின் மேலே இலைகளால் மூடவும். மூக்கின் அருகே மூச்சு விடுவதற்காக இலையின் சிறு பகுதியை வெட்டிவிடவும்.  உடல் இலைகட்டுகளை கட்டுவதுபோல அவர் முழுவதையும்  போர்த்தி சற்று மெல்லிய இறுக்கத்துடன் கட்டிவிடவும்.

அப்படியே 20 முதல் 30 நிமிடங்கள் வரை படுத்திருக்க செய்துவிட்டு கட்டுகளை அவிழ்த்து மூன்று முறை நன்றாக மூச்சை இழுத்துவிட செய்து எழுப்பி நிழலில் அமர்த்தி, எலுமிச்சை அல்லது சாத்துக்குடி, தேன், இந்துப்பு, இஞ்சி கலந்த கலவையை கொஞ்சம் மெதுவாக நன்றாக கொப்பளித்து குடிக்க செய்துவிட்டு பிறகு 15 நிமிடம் கழித்து பச்சைதண்ணீரில் குளிக்க செய்துவிடலாம்.

அதன்பிறகு அன்றைக்கு முழுவதும் இயற்கை உணவு அல்லது சாத்வீக உணவுகளையே உண்ண வேண்டும். 10 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வாழையிலை குளியல் எடுத்துக்கொள்ளலாம்.

வாழை இலை குளியல் எடுத்துக்கொள்ள சிறந்த நேரம் எது?

வாழை குளியல் செய்ய காலை ஏழு மணி முதல் பதினொரு மணிவரை உள்ள நேரமே சிறந்ததாகும்.

வாழை குளியலின் போது இருபது நிமிடத்திற்குள்ளாகவே வெப்பம் அதிகமாக உணரப்பட்டால் வாழையின் மேலே கொஞ்சம் நீரை தெளித்துகொள்ளலாம். இலையின் உள்ளிருப்பவர் பொறுக்க முடியாத அளவு சிரமமாக உணர்ந்தால் அவரை வெளியேற்றி விடலாம்.

குளியலின் போது வெறும் டவ்வல் அல்லது ஒட்டியை மட்டுமே அணிந்து கொள்ளலாம். பெண்கள் குறைந்த பட்டி பருத்தி ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.!

இயற்கையின் ஆற்றல் அளவிட முடியாதது நண்பர்களே அதை முழுவதுமாக பயன்படுத்தி கொண்டு. கெட்ட பின் விளைவுகளை தரும் மருத்துவ முறைகளை முற்றிலும் தவிர்த்து, வெளிநாட்டு இரசாயண மருந்துகளின் குப்பைத் தொட்டியாக நம் உடலை ஆக்காமல் இறை உறையும் ஆலயமாக அதை மாற்றுவது நமது கைகளில் தான் இருக்கிறது.!

இயற்கையோடு இசைந்து இன்புற்று வாழ்வோம்!

நலம் பெருகட்டும்.

Read More

உட்காராதே குந்த பழகிகொள்.. சிந்திக்கவும்...

இன்று தமிழ்நாட்டில் எழுப்பபடும் கட்டிடங்களில் "குந்தும் முறை" கழிவறை இருக்கிறதோ இல்லையோ அமர்ந்து அசுத்தப்படும் கழிவறை இல்லாமல் தமிழர்கள் வீடு கட்டுவதில்லை பெரும்பாலும் என்னடானு கேட்டால் "FASHION" என்கிறார்.

 

அறிவியல் ரீதியாக நடந்திருக்கும் ஆராய்ச்சி முடிவு சொல்கிறது. மனிதன் தனது கழிவுகள் வெளியேற்றம் செய்யும் பொழுது அவன் அமர்ந்த முறையில் அதாவது மேற்கத்திய கழிவறைகளில் உட்கார்ந்து போகும் முறை தவறானது மற்றும் பல நோய்களை ஏற்படுத்த முக்கிய காரணமாக் இருக்கும் என்கிறார் ஆய்வாளர்கள். சரி அதாவது போகட்டும் நம்ம ஊரில் என்ன பண்றாங்க..

 

நாமும் இந்த சமூகத்தில் வளர்ந்தவன் என்று காட்ட கழிவறைகளை கூட மாற்றி விடுகின்றனர். அதிலும் சிலர் இந்த மேற்கத்திய கழிவறைகளை எவ்வாறு உபயோகம் செய்வது தெரியாமல், கேட்பதற்கு வெட்குண்டு சிலர் கழிவறையில் உட்கார்ந்து போகாமல், எப்படி நம்ம பாரம்பரிய கழிவுகளை அகற்ற குந்தி போவதுமாதிரி அதன் மேல் உட்கார்ந்து போகின்றனர். மேற்கத்திய கழிவறை முறைகளை பயன்படுத்தினால் சுகாதாரத்திற்கு கேடு அதிலும் அதை தவறாக பயன்படுத்தினால் உயிருக்கு கேடு என்பதை பல+தமிழர்கள். தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றன

 

நம்ம பசங்களுக்கு தமிழில் சொன்னால் புரியாது ஆங்கிலத்திலேயே ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை  பார்ப்போம் பகிர்வோம்..

Read More

தோப்புக்கரணம்

மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் தோப்புக்கரணம்!! இடது கையால் எந்த பணியை செய்தாலும் வலது பக்க மூளை செயல்திறன் அதிகரிக்கும்.

வலது கையால் எந்த பணியை செய்தாலும் இடது பக்க மூளை செயல்திறன் அதிகரிக்கும்.

உடற்பயிற்சி செய்யும் பொழுது இடத்தின் ஆற்றலும், யோகா செய்யும் பொழுது வலதின் ஆற்றலும் அதிகரிக்கும்.

இடது மூளையின் செயல்பாடு தர்க்க அறிவு, வலதுமூளையின் செயல்பாடு ஆழ்மன, ஞான அறிவு இந்த இரண்டு பக்க மூளையும் சமபலத்துடன் செயல்பட வேண்டுமானால் இரண்டு கைகளையும் . சமமாக செயல்படுத்த வேண்டும், அல்லது தினமும்  50 தோப்புக்கரணங்கள் போடவேண்டும்

ஏனெனில் கைகளை மாற்றி, காதைப்பிடித்து தோப்புக்கரணம் போடும் போது இரண்டு பக்க மூளையும் சிறப்பாக வேலை செய்வதை ஆராய்ந்து கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது மேற்கு நாடுகளில் பிரெய்ன் யோகா என்று நமது தோப்புக்கரணம் பிரபலமாக இருக்கிறதாம், ஆனால் நம்மவர்கள் ... பலருக்கு காலை மடக்கி அமர்ந்து எழவே முடியவில்லை.!

நம்முன்னோர்கள் பழக்கங்கள், ஆற்றலின் கவசங்கள் என்பதை உணர்ந்து, அவர்களின் பழகங்களை, காரணம் அறிந்து பின்பற்றி... நலமோடும்... வளமோடும் வாழ்வோம்.

Read More

வயிற்றுக்கு கட்டுப்பாடு... வைத்தியத்துக்கு தடா!

வீட்டு பட்ஜெட்டில் மாதம்தோறும் மருத்துவச்செலவுக்கே பெரிய அளவில் நிதி ஒதுக்கவேண்டி இருக்கிறது. இந்த நேரத்தில், "ரத்த அழுத்தம், நீரிழிவு. ஆஸ்துமா, கொலஸ்ட்ரால் என பல்வேறு நோய்களையும் நமது உணவுக் கட்டுப்பாட்டாலேயே தீர்க்க முடியும்!" என்கிறார் 'அனாடமிக் தெரபி' என்கிற 'செவி வழி தொடு சிகிச்சை முறையை பரப்பிவரும் கோவையைச் சேர்ந்த பாஸ்கர்

உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும்  முக்கியக் காரணம் ரத்தம் சுத்தமாக இல்லாததுதான். ரத்தத்தைச் சுத்திகரித்தால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம்.

மனித உடலில் சுத்தமான ரத்தத்தை உருவாக்க உணவு, குடிநீர், மூச்சுக்காற்று, தூக்கம், உடல் உழைப்பு ஆகிய ஐந்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழர்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்பதே தெரியவில்லை. உணவை அள்ளிப்போட்டு வயிற்றின் உள்ளே தள்ளுவதற்குத்தான் வாய் இருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். இது தவறு, சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கான ஆரம்பித்துவிடுகிறது. வேலை வாயிலேயே

எக்காரணம் கொண்டும் பசித்தால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். உணவில் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரம் என ஆறு சுவைகள் இடம் பெறுவது அவசியம். அப்போதுதான் உமிழ் நீருடன் சேர்ந்து நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள சர்க்கரை நல்ல சர்க்கரையாக மாறும். மனிதன் வாயின் பக்கங்களிலும் மூன்று ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் இருக்கிறன. இதில் புரோட்டீன், தாது உப்புக்கள் மற்றும் அமைலேஸ் என்கிற என்ஸைம் போன்றவை இருக்கின்றன.

இந்த என்ஸைம் நாம் சாப்பிடும் உணவு வேகமாக ஜீரணமாக உதவுகிறது. வாயிலேயே உணவு நன்றாக மெல்லப்படுவதால், இரைப்பையில் ஜீரணத்துக்காக எடுத்துக்கொள்ளும் சிரமம் குறைக்கப்படுகிறது. இவ்வாறு மென்று சாப்பிடும்போது ஆரம்பத்தில் சில தினங்களுக்கு தாடை வலிக்கும். ஆனால், போகப்போக பழகிவிடும்.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னும் பின்பும் கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பாட்டு வேளையில் மனித வயிற்றில் உணவு ஜீரணமாவதற்கான திரவம் சுரந்திருக்கும். அந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால், அந்த திரவத்தின் தீவிரம் குறைந்து உணவு சரியாக ஜீரணமாகாது. குளித்த பின் சுமார் 45 நிமிடம் கழித்துதான் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு இரண்டரை மணி நேரத்துக்குள் குளிக்கக் கூடாது!" - நம்மில் எத்தனை பேர் இதனை கடைபிடிக்கிறோம் என்பது தெரியவில்லை.

"டி.வி. பார்த்தபடி, புத்தகம் பார்த்தபடி, பேசியபடி சாப்பிடக் கூடாது. நாம் எதைச் செய்கிறோமோ அதற்கு ஏற்றபடிதான் என்ஸைம் சுரக்கும். ஜீரணமாவதற்கான என்ஸைம் சுரக்காது. ஒருவர் எத்தனை இட்லி சாப்பிடலாம்? எத்தனை சப்பாத்தி சாப்பிடலாம் என்பதை வரையறுக்க முடியாது.

இந்த உணவு பலகாரத்தின் அளவு ஒவ்வொரு வீட்டிலும்

வெவ்வேறாக இருக்கும். சாப்பாட்டில் இருக்கிற

கார்ப்போஹைட்ரேட் என்கிற மாவு சத்துதான் சர்க்கரையாக மாறுகிறது. வெள்ளை சர்க்கரை என்கிற சீனியை பயன்படுத்துவதை நிறுத்தினாலே பாதி நோய் குணமாகிவிடும். அதை விஷம் என்றுதான் சொல்லவேண்டும். இனிப்பு தேவை என்கிறபோது தேன், வெல்லம், கருப்பட்டி போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் சொல்வது ஒன்றும் புதியவிஷயங்கள் அல்ல. அன்றே நம் முன்னோர்கள், 'நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம்' என்று சொல்லி இருக்கிறார்கள். இனியாவது செலவு மருந்து இல்லாத, அனாடமிக் தெரபி முறைப்படி சாப்பிட்டு நலமோடு வாழ முயற்சி செய்யுங்கள்!"

Read More

இரவு நன்றாக தூங்க உதவும் 4 உணவுகள்!

இரவு நன்றாக தூங்க உதவும் 4 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம்.

 

செர்ரி பழங்கள் :

 

நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.

 

இந்த கடிகாரத்தை செர்ரிபழங்கள்.உறக்கத்தை நெறியப்படுத்த  ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் அப்படிங்கிற வேதியியல் பொருளின் இயற்றை உறைவிடம் தான் அதனால் இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.

 

வாழைப்பழம்:

இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நிறைய இருக்கு.

அது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் என்கிற அமினோ அமிலமும் வாழைப்பழத்தில் இருக்கிறது. இந்த எல் பரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5 HTP  ஒரு என்கிற ரசாயனமாக மாறிவிடும். அதன் பிறகு இந்த HTP 5  யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.

 

டோஸ்ட் :


நாம் பொதுவாக காலை உணவாக அதிகம் சாப்பிடுகிற டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும்  சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க

விஞ்ஞானிகள். மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின். ஹார்மோன்

உறக்கத்தை தூண்டக்கூடியதாகும். மூளையிலிருந்து சுரப்பதை தூண்டும். இந்த இன்சுலின் ஹார்மோன் வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை ஆகும்.

 

ஓட்மீல் :

 

ஓட்ஸ் கஞ்சி ரத்தத்தில் இருக்கிற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன் விளைவாக உறக்கம் தூண்டப்படும்.

Read More